கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

283 0

தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம்தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 10.3..24 ல் காலை 9:10மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது . இதில் ஆசிரியர்,மாணவர்கள் பெற்றோர்கள் , நிர்வாக உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள், தேசியசெயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் தமிழீழத்தின் அடையாளங்கள் தமிழீழ வரைபடம் திறப்புகோர்வை, கார்த்திகை பூ. ஆகியன, செயற்பாட்டாளர் கொடுத்து பாராட்டினார்கள்.தமிழாலய மாணவன் ஒருவர் வருகைதந்த பிரதிநிதிகளுக்கு நன்றி கூறி நாங்கள் இனி எல்லோருக்கும் உதவியாக இருப்போம் என்று கூறினார் தொடந்து எமது தேசிய பூ விற்கு விளக்கமளித்து இனிதே நிறைவேறியது.