72 நாட்களில் 30 துப்பாக்கிப் பிரயோகங்கள்: 21 பேர் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

24 0

இவ்வருடம்  ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 வரையான 72 நாட்களில்   நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களில்  21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

30  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.