தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும்

32 0

வவுனியா வெடுக்குநாறி மலையிலே பாரிய அநீதி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற தலைவர்களினால் தமிழ் மக்களுடைய மதஸ்தலங்களை அழிக்கும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் பொலிஸ் அராஜகம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

“நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை ஏன் மக்களுடைய ஏனைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கொடுக்கவில்லை.

இதிலும் குறிப்பாக ஜனாதிபதி எங்களை சந்திக்கின்றார்.சந்திக்கும்போது தொல் பொருட்கள் சார்ந்த பிரச்சினைகளை நாம் முன்வைக்கும் போது அதை உடனடியாக நிவர்த்தி செய்வேன் என கூறுகின்றார்.

ஆனால், ஜனாதிபதி இதுவரைக்கும் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை தர தவறியிருக்கின்றார். இந்தச் செயற்பாடுகளை பார்க்கும் போது ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுகின்ற தமிழ் தேசிய தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.