யாழ். நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

20 0

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ். துணை தூதரக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை (09) காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலைமையிலான அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

தம்மிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம்பெற்றுள்ளது.