வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரியை கலைத்த பொலிஸார்

23 0

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

வெடுக்குநாறிமலையில் இன்று லெள்ளிக்கிழமை சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிஸாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டது.

இதனால் 5 கிலோ மீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலய வளாகத்தை விட்டு அகற்றினர். இதனால்  பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.