ரணில், பெசில், மகிந்த திடீர் சந்திப்பு!

23 0

அண்மையில் நாடு திரும்பியிருந்த பெசில் ராஜபக்ஷவிற்கும் சில விசேட தரப்பினருக்கும் இடையில் நேற்றிரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.