20 ஆண்டுகளுக்கு முன்னரான கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு மரண தண்டனை!

111 0

20 ஆண்டுகளுக்கு முன்னர்  பெலியத்த, கெடமான்ன பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருக்கு தங்காலை உயர்நீதிமன்றம் இன்று (7) மரண தண்டனை விதித்துள்ளது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கெடமான்ன பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பியதிலக  மற்றும் 38 வயதுடைய ருவன் தரங்க என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களாவர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பெலியத்த, கெடமான்ன பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரை சுட்டுகொன்ற சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான பியதிலக பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்துச் செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படும் ருவன் தரங்க  என்ற சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பியதிலக்க என்ற சந்தேக நபரின் மனைவியின் சகோதரனாவார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவர் மீதும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று (7) தங்காலை உயர் நீதிமன்றம் சந்தேக நபர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.