திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்து சிவராத்திரி நிகழ்வை முன்னெடுக்கவும்

22 0

இடைக்கால நிர்வாக சபையிடம் நிர்வாகத்தை கையளித்து சிவராத்திரி நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கில் நிர்வாகத்திற்கு இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், இடைக்கால நிர்வாகத்தினை நியமிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது நேற்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது நிர்வாக சபைக்கு எதிராக வழங்கிய கட்டாணையானது மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்ததுடன், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையும் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.