ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘மன்னா ரமேஷ்’ என்பவரை துபாயில் இருந்து அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று துபாய் செல்லத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சந்தேக நபர் தனது மனைவியுடன் காரில் பயணித்த போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், இந்த விடயம் துபாய் பொலிஸாரால் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளைப் பிரதேசத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியமை, கொலை செய்தமை, கப்பம் பெற்றமை, போதைப்பொருள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரை கண்ட இடத்தில் கைது செய்யச் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்பும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

