இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடறி வீழ்ந்த மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு இடறி விழுந்து காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தை சேர்ந்த 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 13 வயதுடைய பாடசாலை மாணவியாவார்.