காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

20 0

காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று , ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் , மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.