வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

20 0

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டது.

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால்  சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் சம்பவ இத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டிருந்தார்.

மேலும் அவர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் அக்கிராமத்தை சேர்ந்த 69 வயதான அருணாசலம் சிவராசா என உறவினர்கள் அடையாளம் காட்டிய இருந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.