சாந்தனின் உடலுக்கு மதகுருமார்கள் அஞ்சலி

54 0

சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாய் நாட்டிற்கு சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று கடவுச்சீட்டை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்திய – இலங்கை அரசுகளது கூட்டு சதியால் காவு கொள்ளப்பட்ட சாந்தனின் புகழுடல் அவன் நேசித்த மண்ணிற்கு வந்திருக்கின்றது.