சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை வளாகத்துக்கு முன்பாகவும் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதிகளிலும் சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தாயக செயலணி என்ற அமைப்பினர் இப்பதாதையை கட்டி சாந்தனுக்கான தமது அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.



