வடக்கு ஆளுநரை சந்தித்தார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர்

185 0

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled Nasser Sulaiman AlAmeri), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆளுநர் தெரிவிக்க, அதற்கு தான் பங்களிப்பு வழங்குவதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர், ஆளுநரிடம் உறுதியளித்தார்.