பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் 1,000 போதை மாத்திரைகளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று வெள்ளிக்கிழமை (1) களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவராவார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .

