வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள் !

38 0

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு  தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

கிராம மட்ட பொது அமைப்புக்கள் என உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘பூந்தோட்டம் சந்தியை பிரதானமாகக் கொண்ட கிராம எல்லைகளுக்குள் மதுபானசாலைக்கான அனுமதியை வழங்காதே’ என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.