மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

25 0

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் வியாழக்கிழமை (29) சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஒலிரூட் பகுதியைச் சேர்ந்த கசூன் லக்மல் 24 வயதுடையவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதிபதி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும். என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.