இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் ?

43 0

இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கண்டறியப்படாத நிலையில் விபிஎன் என்ற  தொழில்நுட்ப மென்பொருள்   மூலம் நைஜீரியாவிலிருந்து இளைஞருக்கு இந்த அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபிஎன் மூலம் கப்பம் கோரி அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் இந்த இளைஞரின் இரு நிர்வாண புகைப்படங்களை அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த இளைஞரின் நிர்வாண புகைப்படங்கள் சந்தேக நபரிடம் சிக்கியதால் தான் இந்த அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிலாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.