சுமந்திரனின் தாயாருக்கு மகிந்த ராஜபக்ச அஞ்சலி

55 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27.02.2024) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.

முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த அவர், உலகை விட்டுப் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு இன்று சென்ற மகிந்த ராஜபக்ச சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.