இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை அளிக்க அவசர தொலைபேசி இலக்கம்

33 0

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (27) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள் அறிவித்தலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

இது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எவ்வாறெனிலும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் கடமையாற்றும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஏனைய பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை விட மிகவும் பொறுப்பானவர்கள் , பாதுகாப்புமிக்கவர்கள் என்பது நான் அறிந்து கொண்டதும் பொதுவானதுமான கருத்தாகும்.