மட்டக்களப்பு வாவியருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

20 0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரதான தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாவியருகில்  ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (28) காலை குறித்த இடத்தில் பஸ்ஸினை தரித்து விட்டு வாவிக்கு அருகே சென்ற போது குறித்த சடலத்தினை கண்ட பஸ் நடத்துனர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரின் சடலமென இனங்கானப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.