கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

258 0
கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  900 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில்  காணப்படுவதனால் குளத்தின் நீரின்  அளவை கருத்திற் கொண்டு  கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார்   900 ஏக்கரில் சிறுபோக  நெற்செய்கை  செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது
இன்றையதினம்  கிளிநொச்சி கோவிந்தன்கடைச்  சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ  அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும்  பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான  எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற  2017 ம் ஆண்டிற்கான  இரணைமடுக்குளத்தின் கீழான   சிறுபோக பயிர்ச் செய்கைக்கான  முன்னோடிக்கூட்டமும்  திட்ட முகாமைத்துவ குழுவினுடைய எதிர்கால   நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பாட்ட  கலந்துரையாடளிலையே இவ் தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது
இக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது