10 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 24/02/2024, பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

157 0

கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 19/02/2024 பெல்சியத்தின் தலை நகரினை வந்தடைந்தது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் வலுச்சேர்த்த இவ்வறவழிப்போராட்டம். பெல்சியம் லுக்சாம்பூர்க் , யேர்மனி நாட்டில் பல அரசியல் சந்திப்புக்களையும், ஊடகங்களையும் சந்தித்து பிரான்சு நாட்டின் எல்லையினை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. கம்சயிம் நகர பிதாவுடனான உரையாடலில் பல பிரதானமான விடயங்கள் எடுத்தியம்பப்பட்டன.

குறிப்பாக, சிறிலங்கா பேரினவாத அரசு நிகழ்த்திய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களின் பூர்வீக நாடாகிய தமிழீழத்தின் விடுதலை, தமிழினப்படுகொலையை நடத்திய குற்றவாளிகளுக்கு பயண மற்றும் பொருளாதார தடை குறித்து விவரிக்கப்பட்டு இந்த விடயங்களை பிரான்ஸ் உயர் மட்டங்களுக்கு எடுத்ததுச் செல்வதாக நகர பிதா உறுதியளித்தார்.அவை நம்பிக்கையான அடுத்த நகர்விற்கும் வழிவகுத்தன கம்சயிம், லா வன்சுனு முதல்வர்களிடத்தில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு, பின் ஈருருளிப் பயணம் இன்றைய நாளில் 40 கிலோமீற்றர்களைக் கடந்து சில்றிக்காம் என்னும் இடத்தில் நிறைவுக்கு வந்தது

நாளை மீண்டும் இப்போராட்டம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்று அங்கிருந்து ஐ.நா நோக்கி நகரும்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”