உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சு இரசாயனங்களுடன் ஒருவர் கைது!

25 0

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய 13 கிலோ 955 கிராம்  நச்சு இரசாயனங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, அனுமதியின்றி பூச்சிக்கொல்லி மருந்துகளை களஞ்சியப்படுத்தியமை மற்றும் விற்பனைக்கு  தயார் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கந்தப்பளை  பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் எனவும், இவர் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.