பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானம்!

25 0

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குவதற்காக  அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் கடந்த வருடம்  நவம்பர் 29 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு 3 மாத காலத்துக்கு வழங்கப்பட்ட நியமனம் இம்மாதம் 29 ஆம் திகதி நிறைவடையும் நிலையிலேயே மீளவும் சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.