உக்குவாவின் கொலையுடன் தொடர்புடையவர் அம்பாறையில் கைது

28 0

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ” வெல்லே சாரங்க” வின்  உறவினரான  ” உக்குவா”  என்று அழைக்கப்படும் நபரை  சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் கடந்த 21ஆம் திகதி மஹாபாகே பிரதேசத்தில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு – செங்கலடி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரராவார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரை கைது செய்ய சென்றபோது அவர் மட்டக்களப்பு – செங்கலடி இராணுவ முகாமில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் அம்பாறை பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.