புதையல் தோண்டிய ஆறு பேர் கைது!

47 0

கடுவெலை, கொரத்தோட்டை, பிரதேசத்தில் வயல் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொரத்தோட்டை  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம் சுமார் எட்டு அடி ஆழத்தில. புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பூசகர் எனவும் புதையல் தோண்டிய இடத்தில்  இவர் பூஜைகளை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.