யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

17 0

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24.2.2024) இரவு சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.யுவதியின் சடலம் சாவகச்சேரி – டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.