போதைப் பொருளுக்கு எதிராக பெண் போலீஸ் தானே எழுதி பாடிய பாடல்

148 0

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:

உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க..
. ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க..
வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க…
கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி..
குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி
..போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க.

இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க.