இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அத்தோடு, நீர் வழங்கலுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

