துருக்கி ஜனாதிபதியின் பாதுகாப்பு படையணி கலைக்கப்படுகிறது.

320 0

_90498169_034186826துருக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விசேட பாதுகாப்பு படையணியை கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சதியுடன் ஜனாதிபதி படையணியைச் சேர்ந்த சுமார் 300 படையினர் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது தீவிர விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை, பிரதமர் பினாலி யில்டிரிம் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.