களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹதுவேகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் தனது வீட்டிலிருந்து அவர் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதையடுத்தே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 25 வயதான கிஹான் மதுசங்க லக்மால் என்பவராவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

