கொழும்பு, மோதரையில் உணவகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) இரவு அவரது உணவகத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் வெள்ளை நிற கார் ஜா-எலவை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மோதர வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடடுக்கு இலக்கான 52 வயதான உணவக முகாமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வலது தோள்பட்டை, கழுத்து மற்றும் கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

