யாழில் சட்ட விரோதமாக 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

24 0

சட்ட விரோதமாக 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அவற்றை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.