யாழில் இனம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

43 0

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று இன்றைய தினம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தை யாழ்ப்பாண நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்