பாட்டியின் 14 இலட்சம் ரூபா பணத்தை திருடிய 14 வயது சிறுவன்!

44 0

தனது பாட்டியின் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த பெண்  வர்த்தகர் ஒருவர் பொலிஸாருக்கு  வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முறைப்பாடளித்த பெண்ணின் 14 வயது பேரன் என தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.