அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்: பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

164 0

அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள பழமையான கோயில் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் திருடப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் வெளிநாட்டில் இருக்கிறது.