இலஞ்சம், ஊழல் தொடர்பில் கைதானவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள்!

167 0

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம்,  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும்   தெரிவித்துள்ளது.

இந்த  முறைப்பாடுகளில் 2,789 முநைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.