இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்கும் விதிமுறைகளைக் கடுமையாக்கத் தீர்மானம்!

33 0

இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  முகாம்களிலிருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் குறித்த நேரத்தில் கையளிக்கப்படுகிறதா என ஆராய வேண்டும் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல பாதாள உலகச் செயற்பாடுகளில் இராணுவப் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதையத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.