ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கை தொடர்கின்றது

38 0

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சனிக்கிழமை அமெரிக்காவும் பிரி;ட்டனும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்திற்கு பதில்நடவடிக்கையாக செங்கடலில் அமெரிக்காவின் இலக்குகளை தாக்கிவரும் ஈரான் சார்பு குழுவை மேலும் பலவீனமாக்குவதற்காக இந்த தாக்குதலை அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்டுள்ளன.

போர்க்கப்பல்களையும் விமானங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்படை கலங்கள் மீதான தங்களின் சட்டவிரோத தாக்குதல்களை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்த தாக்குதல் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

13 பகுதிகளில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட எவ்ஏ 18 போர் விமானங்களும்,பிரிட்டனின் டைபூன் எவ்ஜிஆர்4 ர விமானங்களும் தாக்குதலை மேற்கொண்ட அதேவேளை அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக மேற்கொண்டுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.