சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 24 கைதிகள் விடுதலை

137 0

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் விடுதலையாகி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து வெளியேறினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி எஸ். பிரபாகரன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 24 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.