நாரம்மலவில் சாரதி சுட்டுக்கொலை : சப் – இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு!

177 0

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சப் – இன்ஸ்பெக்டர் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த  மாதம்  18ஆம் திகதி சந்தேக நபரான  சப் – இன்ஸ்பெக்டர்,  லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் 40 வயதுடைய சாரதியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.