மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (02) காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை கடலாமையை அவதானித்துள்ளனர்.
இந்த ஆமை சுமார் 30 கிலோ எடை கொண்டதென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடமும் கிழக்கு கடற்கரைப் பரப்பில் பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

