அதிவேக வீதிகளில் விபத்துகள் அதிகரிப்பதற்கான காரணத்தை விளக்கும் வைத்தியர் சமிதா சிறிதுங்க!

54 0

நேரத்தை மீதப்படுத்துவதனைக் கருத்தில் கொண்டு அதிவேகமாக வாகனம் செலுத்துவதால் அதிவேக வீதிகளில்  விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று அல்லாத பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர்  டாக்டர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்துவதே இந்த விபத்துக்களுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிவேக வீதிகளில் போக்குவரத்து விபத்துக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பதனை நாங்கள்  அவதானித்துள்ளோம்.

எனவே, அதிவேக வீதிகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.