பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வு.

71 0

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.ஆரம்ப நிகழ்வாக புதுப்பானையில் பொங்கல் பொங்கி அதனை இயற்கைத் தெய்வமான கதிரவனுக்கு படையல் இட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றன. தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் பற்றிய சிறப்புப் பேச்சுக்கள் கவிதைகள் மற்றும் கும்மி, கோல் ஆட்டம், கரகம், நாடகம், நடனம் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ்வாண்டு அதிகளவான மக்கள் இந் நிகழ்வில் கலந்து களிப்புற்றனர்.