டென்மார்க்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

81 0

16.01.1993 அன்று சமாதான செய்தியுடன் தமிழீழம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில்
வீரகாவியமான, கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு, கடந்த 21.01.2024 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும் கொல்பேக் நகரங்களில், மிகவும்  எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் நடந்தேறியது.

இந் நிகழ்வுகள் ஈகைச்சுடர்  ஏற்றல், மலர் வணக்கம், அகவணக்கம்  மற்றும் பொதுமக்களின்  வணக்க  நிகழ்வுடன் ஆரம்பமாகி தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உணர்வெழுச்சிக் கோசத்துடன் நிறைவேறியது.