தெற்கு அதிவேக வீதியில் கடும் பனி மூட்டம் ; வாகன சாரதிகள் அவதானம்

142 0

தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியை  பயன்படுத்தும் வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறும் அதிவேகமாக பயணிப்பதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.