சீனாவில் மண்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 9 பேர் பலி

177 0

சீனாவின் தென்மேற்கு யுன்னான் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவில் 18 வீடுகள் புதையுண்டுள்ளதோடு, அதில்  47 பேர்  சிக்குண்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருவதாக சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மங்கோலியா பகுதியில் உள்ள திறந்தவெளி சுரங்கப் பணியாளர்கள் 50க்கும்  மேற்பட்டவர்கள் உட்பட  குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர்.