பெலியத்தையில் டிபென்டர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : 5 பேர் உயிரிழப்பு

95 0

தங்காலை, பெலியத்த பகுதியில் டிபென்டர் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்  5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்து வாகனத்தில் பயணித்த ஐவரில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.